×

9 மாத குழந்தை திடீர் சாவு

கிருஷ்ணகிரி, மார்ச் 3: ராயக்கோட்டை அருகே 9 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராயக்கோட்டை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவரது மனைவி அபிநயா. இவர்களது 9 மாத குழந்தை ஜெய்கிருஷ்ணனுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக குழந்தையை  ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.  இதுகுறித்து, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்