₹47லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

காரிமங்கலம், மார்ச் 3: காரிமங்கலத்தில் நேற்று வாரச்சந்தை நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடு, மாடு, கோழிகளை வாங்க வந்தனர்.இதில் 350மாடுகள் ₹36லட்சத்திற்கும், ஆடுகள் ₹4லட்சத்திற்கும் விற்பனையானது. நாட்டுக்ேகாழி ₹1லட்சத்திற்கும், தேங்காய் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து ₹6லட்சத்திற்கு விற்பனையானது. இதில் மொத்தம் ₹47லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.

Related Stories: