75 பேர் திமுகவில் இணைந்தனர்

தர்மபுரி, மார்ச் 3: தர்மபுரி மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி நகராட்சி 4, 5வது வார்டு பகுதி இளைஞர்கள் 75பேர், பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எஎல்ஏ முன்னிலையில் இணைந்தனர்.இந்நிகழ்ச்சியில், தர்மபுரி நகர பொறுப்பாளர் அன்பழகன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரகீம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் தங்கமணி, நாட்டான் மாது, திமுக நிர்வாகிகள் முல்லைவேந்தன், விஜயபாஸ்கர் நிஷார், ரீஸ்வான், வாகீத், அமீன், அக்மல், முருகன், பொன்.மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: