ஓசூர், மே 20: ஓசூரில், 2026-27ம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாட நூல்கள் பள்ளிகள் திறக்கப்படும் நாளே மாணவ, மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினமே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் ஆகிய அனைத்தும் வழங்கிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள சுமார் 700 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு தளி, கெலமங்கலம், ஓசூர் மற்றும் சூளகிரி ஆகிய நான்கு ஒன்றியங்களை சேர்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் பெற்று பள்ளிகளுக்கு வழங்க உள்ளனர். இப்பணிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) நரசிம்மன் முன்னிலையில் நேற்று நடந்தது.
