×

காவல்துறை, துணை ராணுவம் அணிவகுப்பு

மன்னார்குடி, மார்ச் 3: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக் களிக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி கயல்விழி அறிவுறுத்தலின் பேரில் மன்னார்குடி உட்கோட்ட காவல்துறை மற்றும் இந்தோ திபெத் பிரிவு துணை ராணுவப் படை இணைந்து கொடி அணிவகுப்பு மன்னார்குடியில் நடைபெற்றது. பேரணியை ஏடிஎஸ்பி கார்த்திக் துவக்கி வைத்தார். கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் டிஎஸ்பிக்கள் இளஞ்செழியன், பிரபு, சலீம் ஜாவித், இந்தோ திபெத் பிரிவு துணை ராணுவ படை கமாண்டர் முகேஷ் சிங், இன்ஸ்பெக் டர் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அருகிலிருந்து துவங்கிய இப்பேரணி, பெரியார் சிலை, பெரிய கடை வீதி, பந்தலடி அரசு மருத்துவமனை பழைய, புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று தேரடி பகுதியில் நிறைவடைந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள், கலவரங்கள், சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த காவல் துறை எந்த நேரமும் விழிப்புடன் செயல்படுவதையும் வெளிப்படுத்தும் வித மாக இந்த அணி வகுப்பு நடைபெற்றது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...