×

சோதனை சாவடிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

நாகை, மார்ச் 3: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி நாகையில் மாவட்ட எல்லையான கானூர், தாணிக்கோட்டகம், அருந்தவம்புலம் ஆகிய 3 சோதனை சாவடிகள், மாநில எல்லையான வாஞ்சூர், சேஷமூலை, மானம்பேட்டை, வாழ்மங்கலம் உள்ளிட்ட 4 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாகை மாவட்டத்தில் 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Election Flying Troops ,
× RELATED தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை