×

தேர்தல் பணியில் ஈடுபடும் கல்வித்துறை அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி

நாகை, மார்ச் 3: தமிழகம் முழு வதும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி நாகை கல்வி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கருதி அந்தந்த வட்டாரங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags : Corona ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...