×

தரங்கம்பாடி பகுதியில் தீவிர வாகன சோதனை

தரங்கம்பாடி, மார்ச் 3: தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பூம்புகார் தொகுதியில் 3 பறக்கும் படைகள் அமைக்கபட்டுள்ளது. தாசில்தார் ராகவன், நாகலட்சுமி மற்றும் துணை தாசில்தார் பாபு தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பறக்கும் படையும் சுழற்சி முறையில் 8 மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று தரங்கம்பாடி பகுதி சோதனை சாவடிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Tags : Tharangambadi ,
× RELATED சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு பாராட்டு விழா