கோடங்கிப்பட்டி அருகே முதியவர் சாவு: போலீசார் விசாரணை

கரூர், மார்ச்.3: கரூர் நகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி அருகே 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல்நிலை சரியின்றி கிடப்பதாக தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் இறந்தது யார்? என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: