×

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி

 

திருவிடைமருதூர், மே 19: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாள் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்தமிழ் தேசிய எழுச்சி பேரவை மாநில செயலாளர் அமுதன் துரையரசன் தலைமையில் மதச்சார்பற்ற கட்சியினர் முன்னிலையில் முள்ளிவாய்க்கால் தமிழீழ விடுதலை போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏத்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

Tags : Mullivaikkal ,Thiruvidhaimaruthur ,Liberation Tigers of Tamil Nadu ,Thiruppananthal Kadayee ,Thanjavur district ,Tamil National Uprising Council State Committee ,Liberation Tigers of Tamil Nadu… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்