தேன்கனிக்கோட்டை,மே 19: தேன்கனிக்கோட்டை யாரப் நகரை சேர்ந்தவர் ராமன்(50). இவருடைய மகள் காவ்யா(20). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி காலை, வீட்டில் இருந்த காவ்யா திடீரென மாயமானார். தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் ேதடியும் கிடைக்காததால், இதுகுறித்து ராமன் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
