×

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: ராணுவ வீரர் தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வன்னியப்பேட்டை கிராமத்தில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரர், குடும்ப தகராறில் தாய் வீட்டுக்கு மனைவி சென்றதால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, திம்மையன் பேட்டை ஊராட்சி வன்னியர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). ராணுவ வீரர். இவரது மனைவி நதியா (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஒடிசா மாநிலத்தில் பணியாற்றி, கடந்த 15 நாட்களுக்கு முன் விடுப்பு எடுத்து சொந்த ஊர் வந்தார். சொந்த ஊர் வந்தது முதல் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி கடந்த 4 நாட்களுக்கு முன் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் நதியா, கணவனுடன் கோபித்து கொண்டு, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்து செந்தில்குமார் சுற்றி திரிந்தார். மனைவியை பலமுறை அழைத்தும் அவர், வர மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வந்த செந்தில்குமார், தனது வீட்டு வரண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். விடுமுறையில் சொந்த ஊர் வந்த ராணுவ வீரர், குடும்ப தகராறில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்திரமேரூர்: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர் (20). உத்திரமேரூர் அடுத்த சிறுமயிலூர் கிராமத்தில் தனது மாமாவான மதியழகன் என்பவருடன் வாடகை வீட்டில் தங்கி, அரும்புலியூர் தனியார் கல்குவாரியில் பணியாற்றி வந்தார்.  கடந்த 2 நாட்களாக சுந்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு, அறைக்கு தூங்க சென்ற சுந்தர், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் திடுக்கிட்ட மதியழகன், பலமுறை கதவை தட்யுடம் திறக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு சுந்தர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...