திருவள்ளூர்: அனுமதி பெற்ற இடத்தைவிட்டு, வேறு இடத்தில் விதியை மீறி, 10 அடிக்கு மேல் மண் அள்ளியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி, செங்கரை, பாலவாக்கம் ஆகிய கிராம மக்கள், திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையாவிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் ஏரியில் கடந்த ஒரு வாரமாக அரசு மண் குவாரி இயங்குகிறது. மண் எடுக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் 3 அடிக்கு பதிலாக விதியை மீறி 10 அடிக்கு மேல் மண் எடுத்துள்ளனர்.