இளம்பெண் பலாத்கார வழக்கு தலைமறைவாக இருந்தவர் 3 ஆண்டுக்கு பின் கைது

பூதப்பாண்டி, மார்ச் 2: பூதப்பாண்டி  அருகே உள்ள பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். தொழிலாளியான  இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவியின் உறவினர் மகள்  இவர்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர் மீது ஆசைகொண்ட  முருகன் கடந்த 2014ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணை  பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை கடத்தி சென்று தனியாக குடித்தம் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த  புகாரின்படி போலீசார் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த அவர் கடந்த 2018ம் ஆண்டு திடீரென  தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில்  தேர்தலையொட்டி தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய குமரி மாவட்ட எஸ்பி  உத்தரவிட்டுள்ளார். இதன்படி கீரிப்பாறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்  கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் முருகனை தேடினர். இதில் அவர் கேரளாவில்  பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று  முருகனை பிடித்தனர். இளம் பெண்ணை பலாத்காரம் செய்த  வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம்  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: