×

கிளாண்டர்ஸ் தொற்று: தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு

கிளாண்டர்ஸ் தொற்று எதிரொலியாக தமிழ்நாட்டில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, உதகை மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குதிரை சவாரி மேற்கொள்ள கால்நடைத்துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், மூக்கில் சளி வடிதல், புண்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் குதிரையை சவாரிக்கு பயன்படுத்த கூடாது. குதிரை உரிமையாளர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தல்கள் வெளியிட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Chennai Beach ,Ooty ,Kodaikanal ,Veterinary Department ,
× RELATED புதுச்சேரி சட்டசபை வரும் மே 20ம் தேதி கூடுகிறது