விபத்தில் மாணவன் பலி

நத்தம், மார்ச் 2: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடியை சேர்ந்தவர் பிரதீப் (17). அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் நத்தத்திலிருந்து சிறுகுடி நோக்கி சென்றார். மெய்யம்பட்டி அருகே வந்த போது சிங்கம்புணரியிலிருந்து நத்தம் நோக்கி சென்ற அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே பிரதீப் உயிரிழந்தார்.

Related Stories: