சிவகங்கை, மார்ச் 2: சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பிரிவில் பணியாற்றியவர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் பணி வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை கலெக்டர் நிதியின் கீழ் கொரோனா தடுப்பு பிரிவில் கடந்த 7 மாதங்களாக 4 மருத்துவர்கள், 15 செவிலியர்கள், 9 பல்நோக்கு உதவி பணியாளர்கள் என மொத்தம் 28 பேர் பணியாற்றி வந்தோம். கலெக்டர் நிதி இல்லாத காரணத்தால் கடந்த 26.02.2021அன்று அனைவரும் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.