வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 2:  ஆர்.எஸ்.மங்கலம் தெய்வம்மாள் தெருவில் வீட்டில் நகை பணம் திருடுபோனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தெய்வம்மாள் தெருவை சேர்ந்தவர் ரேவதி. இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு கணவருடன் மதுரை சென்று விட்டார். நேற்று இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததால், வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு தங்க செயின், தோடு, மூக்குத்தி மற்றும் ரூ.19,500 ஆகியவற்றை காணவில்லை. இதுபற்றி அவர், ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: