திறனறித் தேர்வு

தொண்டி, மார்ச் 2:  நம்புதாளை துவக்கப்பள்ளியில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் திறனறிவு தேர்வு நடைபெற்றது.

எழுத படிக்க தெரியாத வயது வந்தோர்களுக்கு எழுத மற்றும் படிக்க போதுமான திறனை வளர்க்கும் நோக்கில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கான தோ்வு தொண்டி அருகே உள்ள நம்புதாளை தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் ஆரோக்கிய சாமி மையத்தை ஆய்வு செய்தார். மையத்தில் 40க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். திறனறிவு தேர்வு மையத்தினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன்,  தேர்வு அலுவலர் பேகம் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு எழுதியோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு எழுதினர். முதல் நிலை கண்காணிப்பாளராக ஜான் தாமஸ், சகாயமதியரசு, தேர்வு அறை கண்காணிப்பாளராக விபிதா ஆகியோர் பணியாற்றினர்.

Related Stories: