டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

பேரையூர், மார்ச் 2: டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார். பேரையூர் அருகே டி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் குருவன் மகன் சுந்தரம்(45). இவர் கடந்த 25ம் தேதி டூவீலரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வண்டப்புலி அருகே வரும்போது சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சுந்தரம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி சுந்தரம் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: