விஷம் குடித்து பெண் தற்கொலை

உசிலம்பட்டி, மார்ச் 2: குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்தார்.எழுமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாவித்ரி(32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்ப பிரச்சனை காரணமாக சாவித்ரி விஷம் குடித்தார். அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: