திருப்பரங்குன்றம், மார்ச் 2: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அதிகாரியுமான முருகேஸ்வரி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் உதவி தேர்தல் அதிகாரியும் திருப்பரங்குன்றம் தாசில்தாருமான மூர்த்தி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மாற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். இதில் பாரபட்சம் இன்றி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மூன்று குழுக்கள் அடங்கிய பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.