திண்டுக்கல் அருகே வாகன சோதனையில் பிரபல கொள்ளையன் கைது காரை கடத்தி வந்தபோது சிக்கினான்

திண்டுக்கல், மார்ச் 2: சட்டமன்ற தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று திண்டுக்கல் அருகே நத்தம் ரோடு, செட்டியபட்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் எந்த ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், காரை சத்திரப்பட்டியில் இருந்து திருடி வந்தது தெரிந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் மதுரை ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த பீமா என்ற சீமராஜா (37) என்பதும், இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும், குண்டாசில் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம்தான் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: