செய்யாறு, மார்ச் 2: செய்யாறில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்டிஓ என்.விஜயராஜ் தலைமையில் நேற்று நடந்தது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த பிப்.26ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அறிவித்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓவுமான என்.விஜயராஜ் தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார்கள் சு.திருமலை, குமரவேலு, நேர்முக உதவியாளர் எல்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய்துறை, போலீஸ், நகராட்சி, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.