ஆரணி, மார்ச் 2: ஆரணி அரசு மருத்துவமனையில் 45 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கண்ணகி, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், 45 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும், பாதிப்புகளும் ஏற்படாது. இதில் குறிப்பாக ரத்த அழுத்தம், ஆஸ்த்துமா, சக்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசி செலுத்தி கொள்ளவது அவசியம். அரசு மருத்தவமனைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும்,