ஒரத்தநாடு, மே 16: ஒரத்தநாடு துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரத்தநாடு நகர், புதூர், பாச்சூர், தெக்கூர், வெட்டிக்காடு, கருக்கடிப்பட்டி, கக்கரை, எலந்த வெட்டி, பாலா முத்தூர், தெலுங்கன் குடிக்காடு, புலவன்காடு, வளத்தான் தெரு, பேக்கரும்பன் கோட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
