பாவூர்சத்திரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாவூர்சத்திரம், மார்ச் 2: தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக  நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. தலைமை வகித்த மாவட்டச் செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, தேர்தலில் பூத் கமிட்டியினர் ஆற்றவேண்டிய பணிகள், வெற்றிக்கான உத்திகளை விளக்கிப் பேசினார். மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.    இதில்  பொருளாளர் சாமிநாதன் மற்றும் ஒன்றிய, நகர,  பேரூர் செயலாளர்கள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: