புதுக்கோட்டை, மார்ச் 2: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த குறைதீர் கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை கொடுப்பர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. இதனால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.