திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவு 100% வாக்களிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கம்

புதுக்கோட்டை, மார்ச் 2: சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்க துவங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்தை, வாகனம் மூலம் வாக்களிப்பது குறித்து கிராமங்களில் குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் உமா மகேஸ்வரி துவக்கி வைத்தார். அதில் அதிநவீன வாகனத்தில் வாக்களிப்பதின் அவசியத்தை குறும்படங்கள் மூலம் ஒளிபரப்பி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: