திருப்பூர், மார்ச் 2: தேர்தல் நேரத்தில் போலீசாரின் மெத்தன போக்கினால் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை நிகழ்ந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரவி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் கலெக்டர் முன்பு நேற்று குற்றம்சாட்டினார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரவி பேசுைகயில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் அ.தி.மு.க. கட்சியினரின் விளம்பர பதாகைகளை அகற்றுவதில் தேர்தல் அலுவலர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர். அ.தி.மு.க.வின் விளம்பர பதாகைகள் அகற்றப்படாமல் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வையில் படும்படி உள்ளன’ண’ என்றார். இதற்கு அ.தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட கண்ணபிரான் பதிலளிக்க முற்பட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.