×

நடந்து சென்ற முதியவர் கீழே விழுந்து பலி

திருப்பூர், மார்ச். 2: திருப்பூரில் நடத்து சென்ற முதியவர் தீடீரென கீழே விழுந்து பலியான விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர், தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (57).கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் நேற்று காலை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள டீ கடையில் ஒன்றில் டீ குடித்து விட்டு நடந்து வந்துள்ளார். அப்போது மணிமாறன் தீடீரென மயக்கமடைந்து அருகில் உள்ள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வேலம்பாளையம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...