திருப்பூர், மார்ச் 2: திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (19). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 26ம் தேதி பைக்கில் ராக்கியாபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (20), பிரவீன் (21) ஆகியோர் வாசுதேவனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து, அவரது பைக்கை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். வாசுதேவன் அளித்த புகாரின் பேரில், திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ், பிரவீன் ஆகியோரை கைது செய்தனர்.