முன்விரோதம் காரணமாக அண்ணன் தம்பியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

திருப்பூர், மார்ச் 2: திருப்பூர்  பாண்டியன்நகரை அடுத்த சமத்துவபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் பிரதாப்குமார்  (26). அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை  பார்த்து வருகிறார். இவரும் சமத்துவபுரம் மேநகர் பகுதியை சேர்ந்த நாகராஜ்  (29) என்பவரும் நண்பர்கள். பிரதாப்குமாருக்கும்,  நாகராஜூக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதாப்குமார்  அவருடைய சகோதரர் பிரபாகரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நாகராஜ்  வீட்டிற்கு சென்றனர். பின்னர் பிரச்னை தொடர்பாக நாகராஜிடம் கேட்டுள்ளனர்.  அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த  நாகராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரதாப்குமார் மற்றும் பிரபாகரனை  சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர்  மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜை  கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: