திருப்பூர், மார்ச் 2: மாணவர்களின் நலன் கருதி மாற்றுப்பள்ளிகளில் பாடம் நடத்த 13 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் நியமிக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் வந்தது.அதன் அடிப்படையில் மாணவர்களின் நலன் கருதி திருப்பூர் மாவட்டத்தில் 13 முதுகலை ஆசிரியர்கள் மாற்றுப் பள்ளிகளில் வாரந்தோறும் சிலர் 2 நாட்களும், சிலர் 1 நாட்களும் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.கானூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முதுகலை ஆசிரியர் (தமிழ்) சுதா, மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) ஆக்னஸ் தீபா, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (கணிதம்) சுமதி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (கணிதம்) ராஜேஸ்வரி, அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (இயற்பியல்) முருகேசன், குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கும், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (பொருளியல்) பிரபாகரன், அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் நியமிக்கப்படுகின்றனர்.