தேர்தல் நடத்தை விதிமுறை அமலால் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

நாகை, மார்ச் 2: சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் நாகை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். நாகை கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 26ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், மக்கள் நேர்காணல் முகாம்கள் மற்றும் இதர குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை கூட்டங்கள் நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: