திமுக ஆலோசனை கூட்டம்

வேதாரண்யம், மார்ச் 2: வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு திமுக கிளை கழகம் சார்பில் பொது தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி கழக செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன், கிளைக் கழக செயலாளர் ஜீவானந்தம், வேலாயுதம், சம்மந்தம், தம்பிதுரை மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தலைமை கழகம் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றிக்கு அயராது பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

Related Stories: