கதிர் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி டிரைவர் கை துண்டானது

நாகை, மார்ச் 2: திருவாரூர் மாவட்டம் ஆமூர்வடக்கு பகுதியை சேர்ந்தவர் ஷியாம் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த ரகுபதிக்கு சொந்தமான கதிர் அடிக்கும் இயந்திரத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நாகூர் அருகே கொட்டகுடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வயலில் நேற்று முன்தினம் ரகுபதி கதிர் அடிக்கும் இயந்திரத்தை இயக்கினார். அப்போது அதில் ஷியாம் கையை விட்டார். இதில் இவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: