காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

காரைக்கால், மார்ச் 2: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை வகித்து பேசுகையில், புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியை கலைக்க பாஜகவின் சூழ்ச்சிகளை எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசுகையில், புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவின் சூழ்ச்சிகளை உடைத்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றார். கூட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

Related Stories: