கஞ்சா விற்றவர் கைது

நாகை, மார்ச் 2: நாகை சவேரியார் கோயில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். இதில் அவர் விற்பனை செய்ய கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அதே பகுதியை சேர்ந்த நெல்போலியனை (50) கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Related Stories: