×

தீவிர வாகன சோதனை தனி நபரின் நன்னடத்தை பாதிக்கும் வகையில்

கரூர், மார்ச். 2: தனிநபரின் நன்னடத்தை பாதிக்கும் வகையில் சுவரொட்டிகள்இ துண்டுபிரசுரங்கள் அச்சடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரித்தார். அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான மலர்விழி தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி பேசுகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127ஏன் கீழ், தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வழங்குதல் தொடர்பாக, வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் பெயர், உரிமையாளர் பெயர், முகவரி போன்றவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் தொடர்புடைய சுவரொட்டி, பிரசுரங்களை அச்சடிக்க உரிமை கோருபவரை அடையாளம்காட்டக்கூடிய உறுதிமொழியை இரண்டு சாட்சிகளின் கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளர் பெற்றுக் கொள்ள வேண்டும்.அச்சக உரிமையாளர் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டி, பிரசுரத்தின் 4 நகல் அது குறித்த விபரங்களை குறிப்பிட்டு 3 நாட்களுக்குள் சுவரொட்டி வெளியிடும் நபரை அடையாளம் காட்டக்கூடிய உறுதிமொழி படிவத்தை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாகவோ, மதம் சாதி மற்றும் இனம் தொடர்பான ஆட்சேபனைகள் எழும் விதத்திலும் மொழி மற்றும் தனிப்பட்ட நபரின் நன்னடத்தையை பாதிக்கப்படும் வகையிலோ சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்படக் கூடாது. அவ்வாறு அச்சடிக்கப்பட்டு வெளியிடும் போது, சம்பந்தப்பட்ட வெளியிடுபவர் மற்றும் அச்சடிப்பவரை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வரைமுறைகளுக்குட்பட்டு எவரும் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளையோ, அச்சடிக்கவோ அல்லது அச்சடிக்க எத்தனிக்கவோ கூடாது. மீறும் நபர்கள் மீது சட்டப்பட்டி 6 மாத சிறைத்தண்டனையோ அல்லது ரூ. 2ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம். பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதால் அச்சக உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களில் அச்சடிக்க கூடாது. பிளக்ஸ் பேனர்கள் துணியில் அச்சடிக்கப்படலாம். எனவே, அனைத்து அச்சக உரிமையாளர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி நேர்மையான, அமைதியான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். இதன் பின்னர், வங்கியாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்க கூட்டமும் நடைபெற்றது. இதில், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் பிரபு உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா