க.பரமத்தி, மார்ச்.2: ஒரே வாரத்தில் தேங்காய் கிலோவிற்கு ரூ.6உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மற்றும் க.பரமத்தி ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
அங்கு நேற்று தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 42,059அரை கிலோ எடையுள்ள 3664தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.35, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.42, ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.6 உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே போல கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 277மூட்டைகளில் 122,62 எடை கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.135, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.136, ஏலம் போனது.கடந்த வார விலையில் மாற்றம் இல்லை.