21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது -டாஸ்மாக் நிர்வாகம்

 

சென்னை: 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது வாங்க வருவோரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் உரிய ஆவணங்களை சரிபார்த்து விற்பனை செய்ய வேண்டும். வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார், ஒட்டுநர் உரிமம் போன்ற ஆவணத்தை சரிபார்த்து மது விற்க வேண்டும். 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: