பட்டதாரி பெண் தற்கொலை

கெங்கவல்லி, மார்ச் 2:  வீரகனூர் அடுத்த நாவலூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவருக்கும் வடகுமரை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் நிவேதாவிற்கும், கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், விவசாய நிலங்களில் வேலை பார்க்க பிடிக்காமல் தனது கணவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன், கணவரிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிவேதாவை, நேற்று மதியம் கணவர் அழைத்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த நிவேதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில், எஸ்ஐ தினேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், ஆத்தூர் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: