கெங்கவல்லியில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் ஆலோசனை

கெங்கவல்லி, மார்ச் 2: கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி உட்பட்ட 351 வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்கள், 27 மண்டல வாக்குச்சாவடி அலுவலர்கள், விஏஓக்கள்,  மண்டல ஆலோசனை கூட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி தேர்தல் உதவி அலுவலர் முருகையா, தாசில்தார் வெங்கடேசன், ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றன. இதில் அரசியல் கட்சிகளின் பேனர், விளம்பரப் பதாகைகள், கட்சி கம்பங்கள் உள்ளிட்டவை உடனடியாக அகற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் கெங்கவல்லி தேர்தல் துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், வீரகனூர் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: