×

எருமப்பட்டி அருகே வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய தம்பதி அதிரடி கைது

சேந்தமங்கலம், மார்ச் 2: எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆசைத்தம்பி (30). விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் இவரது தாய் மாமன் முத்தையன்(40) என்பவருக்கும், முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆசைத்தம்பி, முத்தையன் வீட்டிற்கு சென்று, தனது தாய் வந்தாரா எனக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தையன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை (37) ஆகிய இருவரும் சேர்ந்து, இரும்பு கம்பியால் ஆசைதம்பியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆசைத்தம்பியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், எருமப்பட்டி எஸ்ஐ சேகர், முத்தையன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் நேற்று கைது செய்தார்.

Tags : Valiparai ,Erumappatti ,
× RELATED க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசு...