×

கஞ்சா விற்றவர் கைது

ஈரோடு, மார்ச் 2: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்பநாய்க்கன்பாளையம் அரசமர பஸ் ஸ்டாப் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று, அங்கு பைக்கில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் பைக்கின் டேங்க் கவரில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்றதாக கொண்டப்பநாய்க்கன்பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த பழனிச்சாமி (54) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.26ஆயிரம் ரொக்கம் மற்றும் பைக்கினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ஈரோடு பகுதியில் இன்று மின்தடை