அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்தில் பணி பாதுகாப்பு கோரி, 500 தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். புழல் 23வது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், வருகை பதிவேட்டில் கையெழுத்திட மறுத்ததை கண்டித்து 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரங்கிமலை கன்டோன்மென்ட் அலுவலத்தில் தூய்மை பணியை தனியாரிடம் வழங்கியதை கண்டித்து தூய்மை பணியாளர்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.