காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் கிராமம் தபஸ்யா பார்க் மயிலை நகரை சேர்ந்தவர் மாதவன். கடந்த 26ம் தேதி மாதவன், தனது சொந்த ஊரான கும்பகோணம் சென்றார். அவரது மனைவி, சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாதவன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 30 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ₹42,500 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.