உலக திறனாய்வர்களை கண்டறிய தடகள போட்டி

கரூர், மார்ச் 1: உலகத் திறனாய்வர்களை கண்டறிய மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்ட பிரிவின் சார்பில் உலகத் திறனாய்வுத் திட்டத்தின்கீழ் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டி 6, 7, 8ம்வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தடகளப்போட்டிகள் கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். 500 மாணவர்கள், 400மாணவியர் கலந்துகொண்டனர். தடகளபோட்டி 100மீ, 200மீ, 400மீஓட்டம், குண்டுஎறிதல், உயரம் தாண்டதுல், நீளம்தாண்டுதல், ஆகியபோட்டிகள் 6, 7, 8ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்டது.

Related Stories: