பயிற்சி பணிமனை

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழாய்வு மையம் சார்பில் சென்னை தமிழ் இணைக்கல்வி கழகத்தின் நிதியுதவியுடன் தமிழ் விக்கித்திட்ட பங்களிப்பும் வேலைவாய்ப்பும் என்ற பெயரில் ஒருநாள் பயிற்சி பணிமனை நடந்தது.  இளநிலை தமிழ்துறை தலைவர் அருள்மொழி வரவேற்றார். முதுகலை தமிழ்துறை தலைவர் சிவனேசன் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அசோக் வாழ்த்துரையாற்றினார். சிறப்பு விருந்தினர் சென்னை தமிழ் இணையகல்வி கழக கணினித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் பெருங்களஞ்சிய திட்ட ஆய்வு வளமையர் அருண்குமார் பேசினார். பயிற்சி பணிமனை இணை ஒருங்கிணைப்பாளர் முத்துசெல்வி நன்றி கூறினார். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: